திவால் நிலையிலிருந்து மீட்பதற்கு தமிழ் மலர் நாளிதழின் முன்னாள் பத்திரிக்கையாளர் நிதியுதவி கோரிக்கை

சமூக நோக்கை முன்வைத்து தாம் எழுதிய செய்தி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த இலப்பீட்டு தொகையை செலுத்த தவறியதால் திவால் பிரகடனத்திற்கு ஆளாகியுள்ள தம்மை திவால் நிலையிலிருந்து மீட்பதற்கு தமிழ் மலர் நாளிதழின் முன்னாள் பத்தரிக்கையாளரான ராஜேஸ் மணிமாறன் பொதுமக்களிடம் நிதியுதவியை கோரியுள்ளார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தரப்பினருக்கு 2 லட்சத்து 95 ஆயிரத்து 868 வெள்ளியை செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மிகப் பெரிய இலப்பீட்டு தொகையை செலுத்துவதற்கு தம்மால் இயலாது என்பதால் பொதுமக்கள் பெருமனதுடன் தமக்கு நிதியுதவி அளித்து தம்மை திவால் பிரகடனத்திலிருந்து மீட்குமாறு மிக உருக்கமான கோரிக்கையை ஜொகூர், ஸ்கூடாய், தாமான் நேசாவை சேர்ந்த 33 வயது ராஜேஸ் முன்வைத்துள்ளார்.

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ -வில் தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமியின் சேவை மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் துணையமைச்சர் சரஸ்வதி மூலமாக இக்கோரிக்கையை ராஜேஸ் விடுத்துள்ளார்.

அன்றைய நாளில் இவ்வழக்கை தமிழ் மலர் சார்பில் தாம் முன்னெடுத்து வழிநடத்தியதாகவும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞரான ராஜேஸின் வங்கி கணக்கை திறப்பதற்கு கூட அனுமதியில்லாமல் பல்வேறு சிரமங்களையும் சிக்கலையும் எதிர்நோக்கி வருவதாக துணையமைச்சர் சரஸ்வதி விவரித்தார்.

ராஜேஸை திவாலிருந்து மீட்பதற்கு முதல் நிதியாக 10 ஆயிரம் வெள்ளியை தாம் வழங்குவதாக சரஸ்வதி குறிப்பிட்டார்.

ராஜேஸிற்கு நிதியுதவி வழங்க முன்வருகின்றவர்கள் கீழ்கண்ட வங்கி எண்களுக்கு நிதியுதவியை சேர்க்குமாறு துணையமைச்சர் சரஸ்வதி கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS