பெட்டாலிங் ஜெயா, ஜூன் 27-
கடந்த ஜூன் 10 ஆம் தேதி வரை தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF-யின் மூன்றாவது கணக்கிலிருந்து கிட்டத்தட்ட 7 பில்லியன் வெள்ளியை சந்தாதாரர்கள் எடுத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 2.93 மில்லியன் சந்தாதாரர்களால் கிட்டத்தட்ட 6.98 பில்லியன் வெள்ளியை மூன்றாவது EPF கணக்கிலிருந்து எடுத்திருப்பதாக நிதியமைச்சருமான பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதில் 22.6 சதவீதம் 55 வயதிற்கு கீழ்ப்பட்ட சந்தாதாரர்கள் ஆவர் என்று பிரதமர் அன்வார் மேலும் தகவல் அளித்தார்.