கைத்துப்பாக்கியை வைத்திருந்த தாய்லாந்து பிரஜை உட்பட 3 பேர்

ஜொகூர் பாரு, ஜூன் 27-

இரண்டு வாரங்களுக்கு முன்பு, வீட்டில் கைத்துப்பாக்கியை வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டு உள்ளூர் ஆண்கள் உட்பட ஒரு தாய்லாந்து பெண் ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

29 வயது சோ வீ ஹாங், 26 வயது சோ வீ ஹாங், 29 வயது மிஸ் லோர் மிகராத் ஆகியோர் நீதிபதி டத்தோ அகமட் கமால் அரிபின் இஸ்மாயில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 14 ஆண்டுகள் சிறை மற்றும் ஆறு பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 34 ஆவது பிரிவின் கீழ் அம்மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த ஜூன் 14 ஆம் தேதி மாலை 3.45 மணியளவில் ஜொகூர் பாரு,வாடி ஹனா, ஜாலான் அலிமதில் உள்ள ஒரு வீட்டில் ரிவால்வர் கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக அம்மூவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS