பிரதமரின் ரஷியப் பயணம் கவனமாக ஆராயப்பட வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 27-

மலேசியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையில் நல்லுறவு இருந்து வருகிறது என்ற போதிலும் அந்த நாட்டிற்கு வருகை புரியுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ரஷியா விடுத்துள்ள அழைப்பை, மிக கவனமாக திட்டமிட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் முகமது ஹசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய புவிசார் அரசியல் நிலை, நிச்சயமற்ற சூழலைக்கொண்டுள்ளது. இந்நிலையில் ரஷியாவின் இந்த அழைப்பை ஏற்பதற்கு முன்னதாக அனைத்து நாடுகளுடனான நல்லுறவையும் மலேசியா கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

அண்மைய காலமாக பிரதமரின் ரஷிய வருகை குறித்து நிறைய அழைப்புகள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. ஆனால், அதனை மலேசியாவினால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று நாடாளுமன்ற மக்களவையில் இன்று மச்சாங் எம்.பி. வான் அகமது ஃபய்சல் வான் அகமது எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் முகமது ஹசான் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS