கார் கால்வாயில் விழுந்து தீப்பிடித்ததில் ஒருவர் மாண்டார்

பெந்தோங், ஜுன் 30-

பகாங் , கிழக்கை நோக்கி செல்லும் ஜாலான் பெந்தோங் -காரக் – கின் 57.1 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் கார் ஒன்று கால்வாயில் சறுக்கி விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று காலை 9.32 மணியளவில் இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாக மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறை ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

சம்பவ இடத்தில் Lamborghini காரில் பயணித்த இருவரில் ஒருவர் காருக்குள் சிக்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, மற்றொருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகி பொது மக்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் அறிவித்திருந்தது.

WATCH OUR LATEST NEWS