புத்ராஜெயா, ஜூலை 02-
இலக்குக்கு உரிய உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்துவதில் அரசாங்கம் பின் வாங்காது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டம்
இலக்குக்கு உரிய உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்தி இருப்பது மூலம் கடும் எதிர்ப்புக்கும், குறைகூறல்களுக்கும் அரசாங்கம் இலக்கிய போதிலும் அத்திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்துவதில் அரசாங்கம் பின்வாங்காது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டீசலுக்கான இலக்குக்கு உரிய உதவித்தொகை திட்டம், டீசல் விலை உயர்வு போன்ற அமலாக்கத்தினால் அரசாங்கம் கடும் குறைகூறல்களுக்கு இலக்காகியுள்ளது.
ஆனால், டீசலுக்கான உதவித்தொகையை சிக்கனப்படுத்துவது மூலம் கிடைக்கக்கூடிய சேமிப்புப்பணம் மக்களுக்கே திரும்பித்தரப்படும் . இந்த முடிவில் அரசாங்கம் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
சகாவு எனப்படும் திருட்டு அல்லது இலக்குக்கு உரிய அல்லாதவர்கள் டீசல் உதவித்தொகை சலுகையை அனுபவித்து வருவது மூலம் நாட்டில் வருமான கசிவை அரசாங்கம் அனுமதிக்க முடியுமா ? என்று டத்தோ அன்வார் கேள்வி எழுப்பினார்.
டீசல் உதவித்தொகையை தொடர அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும், ஆனால் பரவலாக டீசல் கடத்தல் காரணமாக அத்திட்டத்தை தொடர முடியவில்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.