சரிந்துவரும் செல்வாக்கை அம்னோ மீட்டெடுக்க வேண்டும்.

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8-

முன்னாள் தலைவர்கள், PKR மற்றும் DAP உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் முதலானோரைக் குறைக்கூறுவதை அம்னோவினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதற்கு பதிலாக, மக்கள் மத்தியில் சரிந்துவரும் தனது செல்வாக்கை மீட்டெடுப்பதில் மட்டுமே, அக்கட்சி தீவிர முனைப்பைக் காட்ட வேண்டுமென, அம்னோ உதவித் தலைவர் டத்தூஸ்ரீ ஜொஹாரி கானி வலியுறுத்தினார்.

அம்னோ பலமாக இருந்தால்தான் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான ம.சீ.சவும் ம.இ.காவும் பலமானதாக இருக்கும்.

மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பதைவிட, அம்னோ அதன் பலவீனங்களை களைவதிலும் கட்சியை மீண்டும் பலப்படுத்துவதிலும் முனைப்பு காட்ட வேண்டுமன, தோட்டத்தொழில்துறை மூலப்பொருள் அமைச்சருமான ஜொஹாரி கானிஅறிவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS