பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8-
இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டுமே டீசலுக்கான உதவித்தொகையை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம், சீன சமூகத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதன் வெளிப்பாடாகவே, சுங்கை பக்காப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அச்சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், பெருமளவில் வாக்களிக்க முன்வரவில்லை என பெயர் கூற விரும்பாத DAP கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
சிறுதோட்டக்காரர்களாக உள்ள சீனர்களுக்கு, டீசலுக்கான உதவித்தொகை வழங்கப்படாததால், அவர்களது செலவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.
அந்த அதிருப்தியின் காரணமாக, பெரும்பாலான வாக்காளர்கள்சுங்கை பக்காப் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள வேளை, இன்னும் சிலர் PERIKATAN NASIONAL கூட்டணி வேட்பாளருக்கு அவர்களது வாக்குகளை அளித்திருப்பதாக அவர் கூறினார்.