கோலாலம்பூர்,ஜூலை 12-
முன்னாள் சரவாக் முதல்வர் துன் அப்துல் தைப் மஹ்மூத் ,மறைந்த பின்னர் அவரது மனைவியான தோ புவான் ரகாத் குர்தி தைப் சரவாக் மாநிலத்தில் தங்கும் வீட்டிற்குள், பாதுகாப்பு காவலர்கள் அனுமதிக்காததால் போலீசில் புகார் செய்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக தோ புவான் ரகாத் குர்தி தைப் இன்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மனு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில், தனது மறைந்த கணவரின் கல்லறையை சென்று காணவும், அவரது பெயரில் ஒரு நன்கொடையை அளிப்பதற்காக கூச்சிங் சென்றபோது இந்த பிரச்சனையை ஏற்பட்டதாக கூறியுள்ளார்