ஹுலு சிலாங்கூர், ஜூலை 19-
சிலாங்கூர்,ஹுலு சிலாங்கூர்,கம்போங் ஸ்ரீ கிளெடாங்-ங்கிலுள்ள செம்பனை தோட்டத்தில், 25 வயது நூர் ஃபர்ஹானா கார்த்தினி எனும் இளம்பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில், போலீஸ் ஆதாரங்களை திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
நேற்றுசுங்கை ட்ரோலக் பகுதியில் அப்பெண்ணின் கைப்பை கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை மணி 10 தொடங்கி, அப்பகுதியில் சோதணை மேற்கொள்ளப்படுவதாக, ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டன் அஹ்மத் பைசல் தஹ்ரீம் தெரிவித்தார்.
அப்பெண் சடலமாக மீட்கபட்ட பகுதியிலும் ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என வினவப்பட்ட போது, அது தடயவியல் விசாரணைக் குழுவின் முடிவை பொறுத்தது என்றாரவர்.