புத்ராஜெயா, ஜூலை 19-
பெர்சத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை நிலைநிறுத்திய முடிவை மீட்டுக்கொள்ளும்படி, மக்களவை தலைவர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல்-லுக்கு மூடா கட்சி வலியுறுத்தியுள்ளது.
அவரது அம்முடிவு, ஷெரட்டன் நடவடிக்கையை போன்று, அரசியல்வாதிகள் அவர்களது சுயநலனுக்காக, மக்களுக்கு துரோகம் இழைப்பதற்கான வாய்ப்பை மீண்டும் ஏற்படுத்தி தந்துவிடும் எனவும் அக்கட்சி அதன் அறிக்கையில் கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஜோஹாரி அவரது அதிகாரத்தை மீறி நிலைநிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறியுள்ளதை தற்காத்து பேசியுள்ள மூடா கட்சி, கூட்டரசு அரசியலைமைப்பின் 49A(1) பிரிவைப் பற்றிய அவரின் விளக்கம் தவறானது எனவும் வாதிட்டுள்ளது.