கோலாலம்பூர், ஜூலை 19-
நாட்டில் கடுமையாகி வரும் இணையப் பகடிவதை சம்பவங்களை கையாளுவதற்கு சிறப்பு நடவடிக்கைக்குழு ஒன்றை அமைப்பதற்கு இன்று கூடிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
இந்த உத்தேச சிறப்புக்குழுவில் தொடர்புத்துறை அமைச்சு, உள்துறை அமைச்சு, இலக்கவியல் அமைச்சு, பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சு ஆகியவை இடம் பெற்று இருக்கும் என்று அரசாங்கப் பேச்சாளரான ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்.
இந்த சிறப்புக்குழு தனது பங்களிப்பை நிறைவாக வழங்குவற்கு இக்குழுவில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், போலீஸ் துறை மற்றும் சட்டத்துறை ஆகியவையும் இடம் பெற்று இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.