தலைமை செயல்முறை அதிகாரிக்கு தடுப்புக் காவல் நீடிப்பு

கிள்ளான்,ஜுலை 19-

கிள்ளான் பள்ளத்தாக்கில் நிர்மாணிக்கப்படவிருக்கும் 600 கோடி வெள்ளி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டத்தில் அதன் நலன் சார்ந்த தரப்பினரிடமிருந்து முதல் கட்டமாக 3 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் தலைமை செயல்முறை அதிகாரிக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை 15 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 50 வயது மதிக்கத் தக்க அந்த சந்தேகப்பேர்வழிக்கு பெறப்பட்ட தடுப்புக்காவல் காலக்கெடு முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த உயர் அதிகாரி, இன்று புத்ராஜெயொ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவல் நீட்டிப்பு அனுமதி பெற்றபட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS