இரண்டு அதிகாரிகளின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள்

கோலாலம்பூர்,ஜூலை 20-

மனித வள அமைச்சின் / மனித மேம்பாட்டுக்கழகமான HRD. Copr. பில் முறைகேடுகள் நிகழ்ந்து இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மத்தியில் அதனை வழிநடத்திய தலைமை செயல்முறை அதிகாரி Datuk Shahul Hamid Shaik Dawood மற்றும் அதன் தலைமை நிதி அதிகாரி Farizul Yahaya ஆகியோர் அளித்துள்ள சாட்சிகளில் நிறைய முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக PAC எனப்படும் பொது கணக்குக்குழு அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் HRD. Copr. பின் தலைமை செயல்முறை அதிகாரியாக ஷாகுல் ஹமிட் நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர் My Events என்ற நிறுவனத்தின் உரிமையாளராக இருந்துள்ளார்.

HRD. Corp நடத்துகின்ற தனது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாட்டளார் நிறுவனமாக My Events நிறுவனம் பயன்டுத்தப்பட்டுள்ளது என்று PAC- யிடம் HRD. Corp தலைமை நிதி அதிகாரி Farizul Yahaya சாட்சியம் அளித்துள்ளார்.

அதாவது தனது தலைமையில் செயல்படும் HRD Corp நிறுவனத்தின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாட்டாளராக ஷாகுல் ஹமிட்டின் சொந்த நிறுவனமான My Events நியமிக்கப்பட்டுள்ளது என்று அந்த உயர் நிதி அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார்.

ஆனால், ஷாகுல் ஹமிட்டோ, HRD Corp. தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு தனது My Events நிறுவனம் அறவே சம்பந்தப்படவில்லை என்று PAC யிடம் சாட்சியம் அளித்துள்ளார்.

HRD Corp- பில் தனது நலன் சார்ந்த எந்த அம்சமும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக தமது My Events நிறுவனத்தை அனுமதிக்கவில்லை என்று ஷாகுல் ஹமிட் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் HRD. Corp. நிறுவனத்திற்குள் தனது சொந்த கம்பெனியான My Events- ஐ நுழைக்ப்பட்டு இருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் HRD. Corp. நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி என்ற முறையில் 24 மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்வதாக PAC-யிடம் ஷாகுல் ஹமிட் வாக்குமூலம் அளித்துள்ளார்.

HRD-Corp- பில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் தற்போது மலேசிய ஊழல்தடுப்பு ஆணையமான SPRM விசாரணை செய்து வரும் வேளையில் SPRM விசாரணைக்கு வழிவிடும் வகையில் HRD-Corp- தலைமை செயல்முறை அதிகாரி என்ற பொறுப்பிலிருந்து விடுப்பில் செல்வதாக ஷாகுல் ஹமிட் கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS