பாரிஸ், ஜூலை 31-
மகளிருக்கான வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை அங்கிதா பகத் தரவரிசை சுற்று போட்டியில் 4-6 என்று தோல்வி அடைந்து ஒலிம்பிக் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 4ஆவது நாள் போட்டிகள் முடியும் தருவாயில் உள்ளது. இன்று துப்பாக்கி சுடுதலில் டிராப், 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர், ரோவிங், குத்துச்சண்டை, ஹாக்கி, பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றது. இதில், துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இந்தியாவிற்கு 2ஆவது வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது.