புத்ராஜெயா,செப்டம்பர் 06-
கடந்த செப்டம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் புத்ராஜெயா, பூச்சோங், கிளானா ஜெயா மற்றும் சுங்கை பீசி ஆகிய பகுதிகளில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோத ஏஜெண்டாக செயல்பட்ட கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
உள்ளூரைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண் ஆகியோரை உள்ளடக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளர். இந்த மூவரே சட்டவிரோத ஏஜெண்டு கும்பலின் மூளையாக செயல்பட்டுள்ளனர் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்துள்ளார்.
22 க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த மூவரும் தற்போது தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக டத்தோ ரஸ்லின் ஜூசோ குறிப்பிட்டார்.