பெய்ஜிங் ,செப்டம்பர் 20-
சீனாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று வெள்ளிக்கிழமை சீனாவின் இரண்டு முன்னணி தலைவர்களை சந்திப்பதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் சீனப்பிரதமர் லி க்கிங் ஆகியோரை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சந்திக்கவிருக்கிறார்.
மலேசியாவிற்கும் சீனாவிற்கும் தூதரக உறவு மலர்ந்து 50 ஆண்டுகள் பொன்விழாவை கொண்டாடும் வேளையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் மாமன்னரின் சீனா வருகை அமைந்துள்ளது.