குவா முசாங், செப்டம்பர் 26-
இரண்டு நாட்களாக வீடு திரும்பாத நபர் ஒருவர், டுக்கு பழ மரத்தின் கிளைகளின் இடுக்கில் சிக்கி, இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
குவா மூசாங், கம்பங் ஜெரெக் என்ற கிராமத்தில் ஒரு பழந்தோட்டத்தின் மரத்தில் 51 வயது நபர் இறந்து கிடந்ததை நேற்று காலையில் அவரின் சகோதரர் கண்டு போலீசுக்கு தகவல் அளித்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் சிக் சூன் பிஓ தெரிவித்தார்.
பழங்களை பறிப்பதற்கு அந்த நபர், மரத்தில் ஏறிய போது, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அந்த உயர் போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.