கிள்ளான் வள்ளக்காடாக மாறியது

கிள்ளான்,செப்டம்பர் 29-

இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழையில் கிள்ளான் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீபாவளி பொருட்களின் விற்பனைக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் ஜலான் தெங்கு கெளானா லிட்டல் இந்தியா பகுதியும் அடங்கும்.

கனத்த மழை பெய்த சிறிது நேரத்திலே லிட்டல் இந்தியா வர்த்தக பகுதியும் மிக வேகமாக நீர் சூழ்ந்துகொண்டு திடீர் வெள்ளத்திற்கு வித்திட்டதாக கிள்ளான், லிட்டல் இந்தியா தொழில் முறைவோர் சங்கத்தின் தலைவர் சார்லஸ் மாணிக்கம் தெரிவித்தார்.

வெல்ல நீரின் மட்டம் வேகமாக உயர்ந்து சில கடைக்குள் புகுந்ததாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS