இஸ்ரேலியருக்கு எதிரான வழக்கு ஜனவரியில் தொடங்ககிறது

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 30-

கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்ட இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த Avitan Shalon என்பவருக்கு எதிரான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்ககிறது.

அந்த இஸ்ரேலிய பிரஜை, எதற்காக நாட்டிற்குள் நுழைந்தார், அவருக்கு எவ்வாறு 6 துப்பாக்கிகளும், 600 தோட்டாக்களும் கிடைந்தன மற்றும் அவரின் நோக்கம்தான் என்ன போற்ற கேள்விகளுக்கு ஜனவரியில் நடைபெறம் வழக்கு விசாரணையின் போது விடை காண முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

38 வயதுடையை அந்த இஸ்ரேலியப் பிரஜைக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரி 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்று இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் 30 சாட்சிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவிருப்பதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் முகமது முஸ்தபா குனியாலம் தமது விண்ணப்பத்தில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS