ரசிகர்களின் நெஞ்சைத் தொட்ட “அமரன்” திரைப்படத்தின் விளம்பர புரோமோஷன் நிகழ்வு

ரவாங்,செப்டம்பர் 30-

ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்திய இராணுவ அதிகாரி ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் அமரன் திரைப்படத்தின் விளம்பர Promotion நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு, கடந்த சனிக்கிழமை ரவாங் ,Anggun City-யில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

“அமரன்” படத்தின் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன் ம்றறும் சாய் பல்லவியுடன் பிரபல இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் படத்தின் இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்.

உலக நாயகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் “அமரன்” திரைப்படம் உருவாகியுள்ளது.

இது, 2014 ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீரில் நடந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, இந்திய இராணுவத்தில் பல சாதனைகளைப் புரிந்து, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மைக்கதையை தழுவி, எழுச்சியூட்டும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.

மேஜர் முகந்தனின் பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது பார்வையாளர்களின் கவன ஈர்ப்பாக மாறியுள்ளது

முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் முகுந்த வரதராஜனின் மனைவி பாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ள இப்படத்தின், முன்னோட்டக் காட்சித் தொகுப்பான அறிமுக காணொளி அல்லது டீசர், 26 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது..

இந்நிலையில் “அமரன்” திரைப்படத்தின் விளம்பர Promotion நிகழ்வில் பேசிய கார்த்திகேயன், ரசிகர்களின் அளப்பரிய அன்பிற்காக முதலில் தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.

மலேசியாவில் ரசிர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆதரவு மற்றும் வரவேற்று உண்மையிலேயே தமது மனதை தொடும் வகையில் உள்ளது என்றார்.

தம்முடைய இந்த மலேசிய வருகை, இந்தியாவில் வேறொரு மாநிலத்திற்கு சென்றதைப் போன்ற உணர்வு, மேலிடுகிறது.

“அமரன்” திரைப்படம், ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் தயாரித்திருக்கும் ஒரு மாவீரரின் வாழ்க்கைப் பயணமாகும். எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். இப்படம் நிச்சயம் உங்கள் இதயத்தை தொடும். உங்கள் அபிமான கதாப்பாத்திரங்களை கொண்ட ஓர் உணர்வுப்பூர்வமான பயணமாக இருக்கும் என்று ரசிர்களின் பலத்த கரவொலிக்கிடையில் கார்த்திகேயன் உறுதி கூறினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட DMY Creation நிறுவனத்தின் தோற்றுநரும், தலைவருமான Datuk முஹம்மது யூசுஃப் பேசுகையில், இது போன்ற அர்த்தம் பொதித்த திட்டத்தில் தாங்கள் ஒரு பகுதியாக இணைந்து இருப்பதில் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டார்.

மேலும் “அமரன்” திரைப்படத்தை விளம்பரப்படுத்தில் DMY Creation நிறுவனம் பெருமையாக கருதுகிறது என்று தமது உரையில் கூறினார்.

“அமரன்” திரைப்படம், தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரைப்படவிருக்கிறது என்று அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS