பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 02-
சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின், சந்தாப்பணம் செலுத்தும் புதிய உச்ச வரம்பு ஊதியம், நேற்று அக்டோபர் முதல் தேதியிலிருந்து மாதம் ஒன்றுக்கு 5 ஆயிரம் வெள்ளியில் இருந்து 6 ஆயிரம் வெள்ளியாக மனித வள அமைச்சு உயர்த்திதியுள்ளது.
2017 ஆம் ஆண்டு வேலையிட காப்புறுச்சட்டம், 1969 ஆம் ஆண்டு தொழிலாளர் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட்டதை அடுத்து இது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக சொக்சோ வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வெள்ளி வரை ஊதியம் பெறும் தரப்பினர் சந்தாப்பணத்தைச் செலுத்துவதற்கு இச்சட்டத்திருத்தம் வலியுறுத்தவதாக அது கூறுகிறது.
இதன்வழி மாதம் 5 ஆயிரம் வெள்ளிக்கும் கூடுதலாக வருமானம் பெறும் தரப்பினர் சமூகப் பாதுகாப்பு அ மைப்பின் மூலம் பயன் அடைவர் என்று சொக்சோ அறிவித்துள்ளது.