கெமாமான், நவ.19- வெள்ளப் பேரிடருக்கு வழிவகுக்கும் வட கிழக்கு பருவமழை கடந்த வாரம் முற்பகுதியில் தொடங்கிய வேளையில் வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட முதலாவது மாநிலமாக திரெங்கானு விளங்குகிறது.
நேற்றிரவு பெய்த கனத்த மழையில் திரெங்கானு, கெமாமான் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
திரெங்கானு மாநில வெள்ளப் பேரிடர் மேலாண்மை செயலகம் முதலாவது நிவாரண மையத்தை திறந்துள்ளது. அந்த செயலகத்தின் தகவலின்படி இதுவரையில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் நிவாரண மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
திரெங்கானுவில் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.