கட்சியில் மீண்டும் சேரக் கோரி இன்னும் விண்ணப்பிக்கவில்லை

டிச.4-

அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் யாரும் கட்சியில் மீண்டும் சேரக் கோரி இன்னும் விண்ணப்பிக்கவில்லை என அக்கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.


எந்த விண்ணப்பம் எறப்பட்டாலும், அது கட்சியின் நிர்வாகக் குழுவிடம் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக நீக்கப்பட்ட அம்னோவின் முன்னாள் தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க தயாராக இருப்பதாக அஹமட் சாஹிட் தெரிவித்திருந்தார்.
முன்னாள் பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ தாஜூடின் அப்துல் ரகுமான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS