டிச.4-
தற்போது பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கு உதவும் வகையில் தனியார் நிறுவனங்களும் கூட்டுறவு நிறுவனங்களும் அளித்துவரும் உதவிகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் நன்றி தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வர் குறிப்பிடுகயில், மத்திய அரசு, மாநில அரசுகள், அதிகாரிகள், அரசாங்க அமைப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன் இணைந்து, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒன்றாக உதவுவதற்கான தனியார் துறையின் அபாரமான பலத்தை இது காட்டுகிறது என்று கூறினார்.
அக்டோபர் வரை, PNB, Petronas, Yayasan Hasanah, Pharmaniaga போன்ற Gஅரசு சார்ந்த நிறுவனங்கள் 10 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியுதவி செய்துள்ளன என பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று, புத்ராஜயாவில் பிரதமர் அலுவலக ஊழியர்களுடன் நடந்த கூட்டத்தில், வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்களின் அவதி குறைய, நிதி உதவி அல்லது உதவிப் பொருட்களைப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்புதல் உள்ளிட்ட வழிகளில் தனியார் துறை உதவ வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.