டிச.5-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்கள் தற்போது சீரடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளந்தானில் இன்று காலையில் 74 துயர் துடைப்பு மையங்களில் 34 ஆயிரத்து 672 பேர் தங்கியிருந்தனர்.
இந்த எண்ணிக்கை இன்று மாலை 4 மணியளவில் 28 ஆ யிரத்து 038 பேராக குறைந்துள்ளது என்று வெள்ளப் பேரிடர் நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.
இதர மாநிலங்களிலும் துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருப்பதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.