பேங்காக், டிச.19-
சட்டவிரோதப் பணமாற்ற கும்பலின் தலைவன் என்று நம்பப்படும் மலேசியர் ஒருவரும் அவரின் மனைவியும் தாய்லாந்து பேங்காக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் போலீசார் தாய்லந்து பணமாக 5 பில்லியன் பாத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட மலேசியர், தாய்லாந்துப் பெண்ணை மணந்து கொண்டு இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.