கோலாலம்பூர், டிச. 20-
அழகு ராணிப் போட்டியை ஏற்பாடு செய்த தரப்பினர் தங்களை ஏமாற்றிவிட்டதாக அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற பெண்மணி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
Miss & Mrs Curvy International 23/24 எனும் தலைப்பில் உடல் பருமனாக கொண்ட பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்த அனைத்துலக அழகு ராணிப் போட்டியில் பங்கேற்பாளர்களுக்கு எந்தவொரு கட்டணமும் இல்லை என்று அறிவித்தவர்கள் கடைசியில் கூடுதலாக 2 ஆயிரம் வெள்ளி கட்டணத்தை விதித்து மோசடி செய்து இருப்பதாக தன்னை யு. நந்தினி என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட பங்கேற்பாளர் புகார் அளித்துள்ளார்.