டிச. 20-
குழந்தையை தத்து கொடுப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வழக்கில் முன்னாள் தாதியர் 40 வயது Mahirah Mohd Yusof மீது கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர் குற்றமற்றவர் என்று வாதிட்டார். பாதிக்கப்பட்டப் பெண்ணிடம் இருந்து பல தவணைகளில் 15 ஆயிரத்து 950 ரிங்கிட் வரை Mahirah பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Mahirah மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். அரசு வழக்கறிஞர் 6 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் கோரினார், ஆனால் Mahirahவின் வழக்கறிஞர் உடல்நலக் குறைவு, குடும்ப பொறுப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி குறைந்த ஜாமீன் தொகையை கோரினார்.
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 6 ஆயிரத்து 500 ரிங்கிட் ஜாமீனில் Mahirah வை விடுவித்தது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது.