ஓப் லஞ்சார் நடவடிக்கை தொடங்கப்பட்டது

கோலாலம்பூர், டிச. 23-


நாளை மறுநாள் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் 2025 புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றை முன்னிட்டு சாலைகளில் வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வற்கு அரச மலேசிய போலீஸ் படை இன்று திங்கட்கிழமை ஓப் லஞ்சார் நடிவடிக்கையை தொடங்கியுள்ளது.

வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த ஓப் லஞ்சார் நடவடிக்கையானது, நாடு முழுவதும் சாலைகளில் வாகனப்போக்குவரத்து நெரிசலை குறைக்க வல்லதாகும்.

அத்துடன் வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியதாகும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS