ஆபாசப்படத்தை எடுத்த ஆடவருக்கு 4 நாள் சிறை

பத்துபகாட், டிச. 26-


தனது பாட்டி உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமல் அவர்கள் குளித்துக்கொண்டு இருந்த போது அபாசப்படம் எடுத்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஜோகூர் பத்துபகாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்கு நாள் சிறை மற்றும் 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

23 வயது பாஸ்லி இசா என்ற அந்த நபர், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து குற்றவியல் சட்டம் 292 பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் சுஹாய்லா ஷபிபுடின் இத்தீர்ப்பை வழங்கினார்.

செம்பனை வெட்டுத்தொழிலாளரான அந்த நபர் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் பத்து பகாட், ஸ்ரீ மேடானில் உள்ள ஒரு வீட்டில் கைப்பேசியைப் பயன்படுத்தி இந்த ஆபாசப்படத்தை பதிவு செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அந்த நபர், தாம் பதிவு செய்த அந்த ஆபாசப்படங்களை இணையத்தில் வைத்துள்ளார் என்று மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான MCMC, போலீசுக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, தனது குடும்ப உறுப்பினர்களையே அந்த நபர் அபாசமாக படம் எடுத்தள்ளார் என்பது அம்பலமானது என்று வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS