பினாங்கில் நில வரிக்கு அபராதத் தொகை ரத்து

பினாங்கு, டிச. 26-


நிலுவையில் உள்ள தங்களுக்கு சொந்தமான நில மற்றும் சொத்துடைமை வரியை விரைந்து செலுத்துபவர்களுக்கு அபாரதத் தொகை 100 விழுக்காடு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக பினாங்கு மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள வரியை செலுத்துகின்றர்களுக்கு அபராதத்தொகை விலக்களிப்பு வழங்கப்படுவதாக பினாங்கு முதலமைச்சர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பினாங்கு மாநிலத்தில் நில மற்றும் சொத்துடைமை வரிகள் நிலுவையில் இருப்பதை குறைப்பதற்கு இந்த சலுகையை வழங்குவது குறித்து கடந்த வாரம் கூடிய ஆட்சிக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS