தாப்பா, டிச. 26-
பேரா, தாப்பாவில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் பணம் வைத்து, கோழிச்சண்டை பந்தயத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 26 பேரை கைது செய்துள்ளனர்.
26 ஆண்களும், ஓர் இந்தோனேசியப் பெண்ணும் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பிடிபட்டதாக பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் சுல்காப்லி சாரியாட் தெரிவித்தார்.
31 க்கும் 50 க்கும் இடைப்ட்ட வயதுடைய அந்த 26 பேரும் கைது செய்யப்பட்டது மூலம் 49 கோழிகள், ஐந்து இரும்புக்கூடைகள், 22 கைப்பேசிகள் 18 ஆயிரத்து 314 ரிங்கிட் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.