12 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளுடன் ஆடவர் பிடிபட்டார்

கோலாலம்பூர், டிச. 28-


கடந்த திங்கட்கிழமையும் நேற்று வெள்ளிக்கிழமையும் போலீசார் மேற்கொண்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் 12 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 13.3 கிலோ எடைகொண்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆடவர் ஒருவர் பிடிபட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.

முதலாவது சோதனையில் மாலை 5.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் 48 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவரின் வாகனத்தில் 7.4 கிலே எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக டத்தோஸ்ரீ காவ் கோக் சின் குறிப்பிட்டார்.

பின்னர் நேற்று காலை 9.30 மணியளவில் பூச்சோங்கில் அந்த நபரின் வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் மேலும் 5.9 கிலோ எடைக்கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS