பெர்சத்து உறுப்பினர்களுக்கு தடை விதிக்கப்படாது

கோலாலம்பூர், டிச. 28-


வரும் ஜனவரி 6 ஆம் தேதி, பாஸ் கட்சி ஏற்பாட்டில் நடைபெறும் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணியில் பெர்சத்து கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்படாது என்று அக்கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி மாஸ் எர்மியாத்தி சம்சூடின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரான டத்தோஸ்ரீ நஜீப் தனது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீடு மீதான விசாரணை அன்றைய தினம் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் பாஸ் ஏற்பாட்டிலான நஜீப் ஆதரவுப் பேரணியில் கூட்டரசு அரசிலமைப்பு சட்டத்தை உறுப்பினர்கள் மீறாத வரையில் இது போன்ற பேரணிகளில் கலந்து கொள்வதற்கு தடைவிதிக்கப்படாது என்று மாஸ் எர்மியாத்தி குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS