பினாங்கு, டிச. 28-
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் பினாங்கு அனைத்துலக விமான நிலையம் அதிகமான வருகையாளர்களை பதிவு செய்துள்ளதாக மாநில முதலமைச்சர் சோவ் கோன் இயுவ் தெரிவித்துள்ளார்.
இதேகாலக்கட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருகையாளர்களின் எண்ணிக்கை 7.46 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்திய மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலிருந்து அதிகமான சுற்றுப்பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று முதலமைச்சர் சோவ் கோன் இயுவ் தெரிவித்துள்ளார்.