டிச. 29-
தென் கொரியாவில் Jeju Air விமானம் விபத்துக்குள்ளானதில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது. சியோலில் உள்ள மலேசிய தூதரகம் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது எனவும் தேவையான தகவல்களைச் சேகரித்து வருகிறது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையின்படி, இதுவரை எந்த மலேசியரும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், மலேசிய அரசாங்கம் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது எனவும் கூறியுள்ளது.
தவி அல்லது தகவல் தேவைப்படும் மலேசியர்கள் சியோலில் உள்ள மலேசிய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் இருக்கும் மலேசியர்களுக்கு தேவையான உதவிகளைப் பெற வழிவகை செய்கிறது.
Jeju Air 7C2216 விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி சுவரை மோதியதால் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் 181 பயணிகள் இருந்தனர். தற்போது வரையில் குறிந்தது 120 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது