கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கியூ ஆர் குறியீடு

புத்ராஜெயா, ஜன.2-


சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஒன்றாவது மற்றும் இரண்டாவது முனையத்தில் இம்மாதம் கியூ ஆர் குறியீடு அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

கே.எல்.ஐ.ஏ. –வில் இரண்டு முனையங்களிலும் பயணிகள் புறப்பாடு பகுதிகளில் உள்ள 40 முகப்பிடங்களிலும் மலேசியப் பிரஜைகளுக்கு இந்த கியூ ஆர் குறியீடு அறிகப்படுத்தப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கூட்ட நெரிசல் குறிப்பாக, பயணிகள் வருகையின் உச்சக்கட்ட நேரத்தின் போது ஏற்படக்கூடிய நெருக்கடியை சமாளிப்பதற்கு இந்த கியூ ஆர் குறியீடு, மலேசியர்களின் புறப்பாட்டிற்கு சுலபத்தை தர வல்லதாக இருக்கும் என்று சைபுடின் தெரிவித்தார்.

இதுவொரு பரீச்சார்த்த நடவடிக்கையாக அமலில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS