நஜீப் ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகா உறுப்பினர்கள் திரள்வர்

கோலாலம்பூர், ஜன.2-


வரும் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பாஸ் கட்சி ஏற்பாட்டிலான நஜீப் ரசாக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணியில் மஇகாவின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் திரள்வர் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவிதுள்ளார்.

இந்தப் பேரணி, கட்சி மற்றும் இன அரசியல் அடிப்படைக்கு அற்பாட்டதாகும். நஜீப்பிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் அரசாணையின் கூடுதல் உத்தரவு தொடர்பில் அவருக்கு அதரவு தெரிவிக்கும் வகையில் மஇகாவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரள்வர் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS