ஜன.3-
கோலா சிலாங்கூரில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ஈடுபட்டதை காவல் துறை உறுதி செய்துள்ளனர். அந்த அதிகாரி வாகனம் ஓட்டும்போது தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என சிலாங்கூர் மாநில காவல் துறையின் தலைவர் Datuk Hussien Omar Khan தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரி சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறை இந்த சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளார் Datuk Hussien.
காவல் துறை சாட்சிகளின் வாக்குமூலங்களையும், சிசிடிவி பதிவுகளையும் சேகரித்து வருகின்றனர். விசாரணை முடிந்ததும் அறிக்கையை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். .
உயிரிழந்தவர் சுகாதார நிலைய ஊழியர் என்றும், கிள்ளானிலிருந்து கோலா சிலாங்கூருக்கு வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.