விசாரணை நடத்த அமலாக்க நிறுவன ஒருமைப்பாட்டு ஆணையம் EAIC பரிந்துரைத்துள்ளது

ஜன.3-

மலேசியக் குடிநுழைவுத் துறையின் COM எனப்படும் வெளியீட்டு ஆய்வு குறிப்பாணை விண்ணப்பங்களில் முறைகேடு தொடர்பாக அரச மலேசிய காவல் துறை விசாரணை நடத்த அமலாக்க நிறுவன ஒருமைப்பாட்டு ஆணையம் EAIC பரிந்துரைத்துள்ளது. குடிநுழைவு அதிகாரிகள் நிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதால் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தரப்பினர் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் COM விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதாகவும், விண்ணப்பத்தின் அசல் ஆவணங்கள் காணாமல் போனதாகவும் EAIC இன் விசாரணையில் தெரியவந்துள்ளது. இஃது ஆவண மோசடியையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

நிறுவன இயக்குநர்களின் அறியாமையால் COM அங்கீகரிக்கப்பட்டதாக EAIC க்கு புகார் அளிக்கப்பட்டது. இது ஊழியர்களின் தற்காலிக வேலை அனுமதியை இரத்து செய்ய வழிவகுத்தது. இந்த புகாரின் அடிப்படையில் EAIC விசாரணை நடத்தியது.

சம்பந்தப்பட்டக் குடிநுழைவு அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கவும், myIMMs ஐ மேம்படுத்தவும் EAIC பரிந்துரைத்துள்ளது. மேலும், மனுதாரர் அளித்த புகார் தொடர்பாக காவல் துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் EAIC வலியுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS