45 வயது ஆடவர் நீரில் மூழ்கி இறந்தார்

ஜன.5-

கெடா ஆலோர் ஸ்டார் அருகே கெடா ஆற்றைக் கடக்கும் ஜாலான் ராஜா பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்த 45 வயது ஆடவர் நீரில் மூழ்கி இறந்தார். இவ்விவகாரம் குறித்து தகவல் அளித்த கெடா மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் உதவி இயக்குநர், மூத்த அதிகாரி Azhar Mohamad குறிப்பிடுகயில், ஆரம்பத்தில் மேற்பரப்பு தேடல் நடத்தப்பட்டதில், எந்த தடயமும் கிடைக்காததால், முக்குளிப்புப் படையினர் ஆற்றில் மூழ்கித் தேடியதாத் தெரிவித்தார்.

மாலை 4.10 மணிக்கு அந்த ஆடவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக Azhar கூறினார்.

இந்த மீட்புப் பணியில் ஜாலான் ராஜா, ஜித்ரா, சுங்கை பெட்டானி ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த முக்குளிப்புப் படை உறுப்பினர்கள் ஈடுபட்டனர். பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக, அந்த ஆடவரின் உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS