சண்டக்கான், ஜன.8-
மாது ஒருவர், 23 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை, இரவு 8 மணியளவில் சண்டக்கான், Jalan Buli Sim Sim-மில் நிகழ்ந்தது.
47 வயதுடைய அந்த மாது மிக உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக சண்டக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் புவாட் அப்துல் மாலேக் தெரிவித்தார்.
அந்த பெண்ணிடம் காணப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்ததில் அவர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.