சுங்காய் கிருஷ்ணர் திருக்கோயிலின் புதிய நிர்வாகத்தின் கல்வி உதவி

சுங்காய்

இங்குள்ள கிருஷ்ணர் திருக்கோயிலை தற்போது புதிய நிர்வாகம் தலைமையேற்றுள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த அக்கோயிலின் புதிய தலைவராக மாதவன் பூபாலன் பொறுப்பேற்றுள்ளார். அவரது சீரியத் தலைமைத்துவத்தின் முதல் சமூகம் சார்ந்த நடவடிக்கையாக, இங்குள்ள பி40 குடும்பத்தைச் சேர்ந்த 2 வறிய நிலை மாணவர்களுக்கு கல்வி உபகரணப் பொருட்கள், சீருடைகள், புத்தகங்கள் ஆகியன வழங்கப்பட்டன.

புதிய நிர்வாகத்தின் மிகப் பெரிய நடவடிக்கையாக கோயிலின் திருப்பணி வேலைகள் நடக்கத் தயாரகிக் கொண்டிருந்தாலும், தங்களின் சமூகப் பொறுப்புணர்வை, குறிப்பாக, கல்வி சார்ந்த சமூகப் பணியை முன்னெடுத்தது சிறந்த தொடக்கமாகக் கருதுவதாக மாதவன் பூபாலன் தெரிவித்தார்.

உதவிகள் தேவைப்படும் இந்த மாணவர்களை அடையாளம் கண்டு கோயிலின் நிர்வாகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்த சுங்காய் வட்டார சமூக ஆர்வலர் ஷகிலா தேவிக்கு தமது நன்றியை மாதவன் பூபாலன் தெரிவித்துக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS