ஒரு மலேசியப் பிரஜையான பன்னீர் செல்வம் பரந்தாமன், போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக நாளை வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிடலப்படவிருக்கிறார்.
37 வயதான அந்த மலேசியப் பிரஜை, தூக்கிலிடப்படுவது, நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
பன்னீர் செல்வம் தூக்குமேடையிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு வேண்டிய நடவடிக்கையை மலேசியா உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அந்த நிபுணர்கள் அகப்பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.