ஆஸ்திரேலிய பிரஜையை மலேசிய கடற்படை காப்பாற்றியது

லுமூட், மார்ச்.12-

தனது பாய் மரக்கப்பலின் பிரதான இயந்திரம் பழுதடைந்து, லுமூட் அருகில் புலாவ் பேராக் கடற்பகுதியில் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகிய ஓர் ஆஸ்திரேலிய பிரஜையை அரச மலேசிய கடற்படை காப்பாற்றியது.

தாய்லாந்து கிராபி தீவிலிருந்து லங்காவி பயணத்தின் போது, அந்த பாய்மரக் கப்பலுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் அந்த பாய்மரக் கப்பலை தேடும் பணி இன்று காலை 11.30 மணிக்கு முடுக்கி விடப்பட்டது.

ஆனால், அந்த பாய்மரக்கப்பலின் இயந்திரம் பழுதடைந்த நிலையில், கடந்த 4 நாட்களாக அந்த ஆஸ்திரேலியப் பிரஜை கடலில் பெரும் தவிப்புக்கு ஆளானது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என அரச மலேசிய கடற்படை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS