கோலாலம்பூர், ஏப்ரல்.28-
அரச பரிபாலனம் தொடர்பில் பொய்யானத் தகவலைப் பகிர்ந்ததாகக் கூறப்படும் சமூக ஊடகப் பிரபலத்தை தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி விசாரணை செய்து வருகிறது.
அந்த நபரிடமிருந்து இரு முறை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு இருப்பதாக எம்சிஎம்சி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
அந்த நபர், கடந்த வாரம் சைபர் ஜெயாவில் உள்ள எம்சிஎம்சி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.