பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சீனாவின் உறுதிப்பாட்டை மலேசியா மதிக்கிறது

கோலாலம்பூர், மே.27-

பரஸ்பர நலனுக்காக ஜிசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், சீனா மற்றும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் மூலம் வியூக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, சீனப் பிரதமர் லீ கியாங்குடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கோலாலம்பூரில் நேரடி சந்திப்பை நடத்தினார்.

2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவராக மலேசியா பொறுப்பேற்ற நிலையில், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில், குறிப்பாக தற்போதைய உலகளாவிய சவால்கள் மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்களை எதிர்கொள்வதில் சீனாவின் உறுதிப்பாட்டை தாம் பாராட்டுவதாக அன்வார் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது முக்கியம். குறிப்பாக கிழக்குக் கடற்கரை ரயில் இணைப்பு, தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைகளைத் தீர்ப்பது, ஆசியான்-சீனா சுயேட்சை வர்த்தகப் பகுதி நெறிமுறை மேம்பாடு, ஹலால் தொழில் மற்றும் வர்த்தகம் போன்ற போக்குவரத்துத் திட்டங்கள் இதில் அடங்கும் என்று அன்வார் குறிப்பிட்டார்.

ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், பொருளாதார ஒத்துழைப்பை இயக்குதல் மற்றும் பிராந்திய பிரச்சினைகளைத் தூதரக உறவு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் நிவர்த்தி செய்தல் ஆகிய நோக்கங்களுடன் ஆசியானை வழிநடத்துவதில் மலேசியாவின் முயற்சிகள் இந்த 2025 ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்ச நிலை மாநாடு பிரதிபலிக்கிறது என்று அன்வார் கூறினார்.

WATCH OUR LATEST NEWS