தஸ்காவில் 7 மாதக் குழந்தை உயிரிந்துள்ளது

கோலாலம்பூர், மே.28-

தஸ்கா எனப்படும் மழலையர் பராமரிப்பு மையத்தில் 7 மாதக் கைக்குழந்தை இறந்துள்ளது. கோலாலம்பூர், ஸ்தாபாக், டானாவ் கோத்தாவில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காலை 9 க்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ஷாருல் அனுவார் அப்துல் வாஹாப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

2001 ஆம் ஆண்டு சிறார் குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்தச் சம்பவம் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS