இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர் பேர்லி டான்-எம்.தீனா

கோலாலம்பூர், மே.28-

நாட்டின் முன்னணி மகளிர் இரட்டையர்களான பேர்லி டான்-எம். தீனா சிங்கப்பூர் பொது பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் ஹாங் காங் ஜோடியைத் தோற்கடிப்பதில் எந்த சிரமத்தையும் எதிர்நோக்கவில்லை. 
 
 
உலகில் நான்காவது நிலையில் இருக்கும் பேர்லி டான்-எம். தீனா 21-16, 21-18 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற 32 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது. 
 
இருப்பினும்,  இரண்டாவது சுற்றில் கடுமையான சவால் அவர்களுக்குக் காத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் மலேசிய பொது பூப்பந்து போட்டி வெற்றியாளர்களான ஜப்பானின்  யூகி ஃபுகுஷிமா-மாயு மாட்சுமோட்டோவை எதிர்கொள்கின்றனர். 
 
அந்த ஜப்பானிய ஜோடி முதல் சுற்றில் 32 நிமிடங்களில் அமெரிக்க ஜோடியான பிரான்செஸ்கோ கார்பெட்-ஜென்னி காய் ஜோடியை 21-14, 21-17 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. 

WATCH OUR LATEST NEWS